Monday, October 12, 2009

நட்பு மட்டுந்தான்..!


உன் தோளில் நானும்
என் தோளில் நீயும்
சாய்ந்து உறங்கிய போது,
அங்கு நமக்காக
தலையணை வழங்கியது...
நீயும் நானும்
சேமித்து வைத்திருக்கும்
நம்பிக்கையான
நம் நட்புதான்...



என் வாழ்க்கை கணக்கில்...
கூட்டி, கழித்து,
பெருக்கி, வகுத்ததில்
இறுதியில்....
எஞ்சியதென்னவோ
உன் குறுகியகால
நட்பு மட்டுந்தான்..!

No comments:

Post a Comment