Sunday, December 19, 2010

நினைவாக...


நிலவைப் போல் வெளிச்சம் வேண்டாம்...
நினைவாக உன் இதயத்தில்
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை...
என் ஆயுள் முடியும் வரை
துணையாய் இருப்பேன்
நட்புடன்..!

முதல் கவிதை





நான் எழுதிய
முதல் கவிதை.....

அம்மா!

தாய்மை



தாய்மைக்கு வயதில்லை....
கண்டுக் கொண்டேன் உன்னிடம்!

Saturday, October 9, 2010

என் நாட்கள்..



நீ பிரிந்த பிறகு
நகர மறுக்கிறது என் நாட்கள்,
கை கொடுத்து தள்ளி விடுங்கள்
என் கடிகார முள்ளை..!

Saturday, October 2, 2010

உன் பெயர்!!!



வள்ளுவனின்
முப்பாலுக்கும் அப்பால் இனிக்கிறது...
தமிழில் உன் பெயர்!!!

Sunday, August 8, 2010

அம்மா...


நீ வாழ
என் கருவரை தந்தேன்..
நான் வாழ உன் வீட்டில்
ஒரு அறை கூடவா இல்லை???


உன் கை பிடித்து நடந்த காலம் போய்,
என் கை பிடித்து நடக்கும் தருனத்தில் நீ
வாராயோ தாயே..!



அன்று திக்கிப் பேசினேன்...
அம்மனுக்குத் தங்க நாக்கு காணிக்கை..!
இன்று திட்டிப் பேசினேன்...
அதே அம்மனுக்கு முன் மௌனமாய் நீ..!

Monday, April 12, 2010

மழை


உன் கண்ணீரில்
மறைந்தது
என் கண்ணீர்..!


உன் மழைத் துளிகளைக்
கோர்த்து

மாலை சூட ஆசை!

தாலாட்டுவதில்
நீயும் ஒரு
தாய்தான்...!


என் வீட்டு ரோஜா
பூத்தது
நீ தந்த முத்தத்தில்.!