உன் தோளில் நானும் என் தோளில் நீயும் சாய்ந்து உறங்கிய போது, அங்கு நமக்காக தலையணை வழங்கியது... நீயும் நானும் சேமித்து வைத்திருக்கும் நம்பிக்கையான நம் நட்புதான்...
என் வாழ்க்கை கணக்கில்... கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்ததில் இறுதியில்.... எஞ்சியதென்னவோ உன் குறுகியகால நட்பு மட்டுந்தான்..!
என் வாழ்க்கை பாதையில் எத்தனையோ அறிமுகங்கள்... அத்தனை அறிமுகங்களும் உன்னைப் போல் என் ஆன்மாவைத் தொட்டதில்லை!
நமது மூன்றாண்டு கால நட்பை எண்ணிப் பார்க்கிறேன்... அந்த இனிய நாட்கள் யாவும் காலத்தால் அழியா காவியங்கள்!
காலங்கள் மாறலாம்; கனவுகள் கூடலாம்; ஒவ்வொரு கனவிலும் நிஜங்களின் நிழல்கள்!
இரவின் மடியில் நட்சத்திரங்கள் கொள்ளும் அன்பு நிஜம் என்றாலும், வெகுதூரம் என்பதுதான் உண்மை! அதுபோல் நம் நட்பும் வெகுதூரம் ஆகிவிடும் என்றாலும் பிரியாத வரம் கேட்போம்!