Thursday, March 24, 2011

கவிதைகளே...


இதுவரை என் டைரியில்
சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம்
இன்று முதல் விடுதலை...
காகித கப்பல்களாக!


*******************************


அன்புள்ள கவிதைக்கு...

உன்னை எழுதிய பின்
நான் கண் அயர்ந்தாலும்
இரவெல்லாம் விழித்திருந்து
உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ..!



Monday, March 21, 2011

மழைச்சாரல்



உன் சாரலில்
என் துன்பம் மறந்து
விழி மூடுகிறேன்...
தாய் மடி கண்ட சுகத்தோடு!!!

இதயம்



எல்லோரையும் அனுமதி இன்றி நனைக்கும் மழையே...
என்னவனையும் கொஞ்சம் நனைத்திடு.
ஈரமில்லா அவன் இதயமும்
கொஞ்சம் நனையட்டும்...
இன்றே அனுமதி தருகிறேன்!

Wednesday, March 16, 2011

என் இரவுகள்





நினைக்க வேண்டாம் என
எண்ணிய போதும்
உன் நினவுகளோடு முடிகிறது
என் இரவுகள்..!

அன்னையின் கவிதை


எழுத, படிக்க தெரியாத
என் அன்னை எழுதிய முதல் கவிதை
என் பெயர்..!