Wednesday, January 11, 2012

மௌனங்கள்



மௌனங்கள் சில வேளையில்
மனதோடு மட்டும் பேசும்...
என்னோடு நீ இல்லாத போது.!

Tuesday, January 10, 2012

கலைந்த கனவு

இமைகளைத் திறந்தால்
கனவு கலைந்து விடும் என்று
தூக்கத்திலே நடக்கிறேன் நான்...
நிஜ வாழ்க்கையில்
நீ இல்லை என்று
அறிந்தப் பின்னும்...

Wednesday, December 14, 2011

புல்லாங்குழல்



ஒரு மூங்கில் காட்டையே அழித்து
புல்லாங்குழல் செய்தேன்...
ஊதிய போதுதான் தெரிந்தது
அது ஊமை என்று...
என் Msg களுக்கு Reply செய்யாத
உன்னைப் போல்..!

Wednesday, November 2, 2011

வானம்





சிறகுகள் இன்றி
பறக்கிறேன்
வானமாய் நீ இருப்பதால்..!

நம்பிக்கை



முடிவில்லா ஒரு
நீண்ட பாதையில் பயணிக்கிறேன்
முடிவில் நீ இருப்பாய் என..!

Thursday, June 2, 2011

உன் நினைவு




எனை தாண்டி சென்ற தென்றலும்
உன் நினைவுகளைதான் கொண்டு வருகிறது!

Thursday, March 24, 2011

கவிதைகளே...


இதுவரை என் டைரியில்
சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம்
இன்று முதல் விடுதலை...
காகித கப்பல்களாக!


*******************************


அன்புள்ள கவிதைக்கு...

உன்னை எழுதிய பின்
நான் கண் அயர்ந்தாலும்
இரவெல்லாம் விழித்திருந்து
உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ..!