Wednesday, December 14, 2011

புல்லாங்குழல்



ஒரு மூங்கில் காட்டையே அழித்து
புல்லாங்குழல் செய்தேன்...
ஊதிய போதுதான் தெரிந்தது
அது ஊமை என்று...
என் Msg களுக்கு Reply செய்யாத
உன்னைப் போல்..!

Wednesday, November 2, 2011

வானம்





சிறகுகள் இன்றி
பறக்கிறேன்
வானமாய் நீ இருப்பதால்..!

நம்பிக்கை



முடிவில்லா ஒரு
நீண்ட பாதையில் பயணிக்கிறேன்
முடிவில் நீ இருப்பாய் என..!

Thursday, June 2, 2011

உன் நினைவு




எனை தாண்டி சென்ற தென்றலும்
உன் நினைவுகளைதான் கொண்டு வருகிறது!

Thursday, March 24, 2011

கவிதைகளே...


இதுவரை என் டைரியில்
சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம்
இன்று முதல் விடுதலை...
காகித கப்பல்களாக!


*******************************


அன்புள்ள கவிதைக்கு...

உன்னை எழுதிய பின்
நான் கண் அயர்ந்தாலும்
இரவெல்லாம் விழித்திருந்து
உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ..!



Monday, March 21, 2011

மழைச்சாரல்



உன் சாரலில்
என் துன்பம் மறந்து
விழி மூடுகிறேன்...
தாய் மடி கண்ட சுகத்தோடு!!!

இதயம்



எல்லோரையும் அனுமதி இன்றி நனைக்கும் மழையே...
என்னவனையும் கொஞ்சம் நனைத்திடு.
ஈரமில்லா அவன் இதயமும்
கொஞ்சம் நனையட்டும்...
இன்றே அனுமதி தருகிறேன்!

Wednesday, March 16, 2011

என் இரவுகள்





நினைக்க வேண்டாம் என
எண்ணிய போதும்
உன் நினவுகளோடு முடிகிறது
என் இரவுகள்..!

அன்னையின் கவிதை


எழுத, படிக்க தெரியாத
என் அன்னை எழுதிய முதல் கவிதை
என் பெயர்..!

Saturday, February 26, 2011

காதல் வந்தது..




காதல் வந்தது..
என் இதயத்தைத் திருடி சென்றது!
நட்பு வந்தது..
இதயத்துடிப்பையே கொடுத்து சென்றது!

Monday, February 14, 2011

நிரந்தரம்




இறுதிவரை உன்னுடன் இருப்பது
நிரந்தரம் இல்லை என்றாலும்
உன்னுடனான என் நினைவுகள் நிரந்தரம்...!