Monday, October 12, 2009

பிரியாத வரம் வேண்டும்!

என் வாழ்க்கை பாதையில்
எத்தனையோ அறிமுகங்கள்...
அத்தனை அறிமுகங்களும்
உன்னைப் போல்
என் ஆன்மாவைத் தொட்டதில்லை!


நமது மூன்றாண்டு கால
நட்பை எண்ணிப் பார்க்கிறேன்...
அந்த இனிய நாட்கள் யாவும்
காலத்தால் அழியா காவியங்கள்!


காலங்கள் மாறலாம்;
கனவுகள் கூடலாம்;
ஒவ்வொரு கனவிலும்
நிஜங்களின் நிழல்கள்!


இரவின் மடியில்
நட்சத்திரங்கள் கொள்ளும் அன்பு
நிஜம் என்றாலும்,
வெகுதூரம் என்பதுதான் உண்மை!
அதுபோல் நம் நட்பும்
வெகுதூரம் ஆகிவிடும் என்றாலும்
பிரியாத வரம் கேட்போம்!


No comments:

Post a Comment